×

திருமங்கலத்தில் பரபரப்பு மதுரையில் இறுதிக்கட்டமாக அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

மதுரை, ஏப். 17: மதுரை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன், அமைச்சர் செல்லூராஜூ ஆகியோர் மதுரையில் நேற்று இறுதிக்கட்டமாக வாக்கு சேகரித்தனர். மதுரை தெப்பக்குளம் பகுதியில் வாக்கு சேகரித்த ராஜ்சத்யன் பேசியதாவது:மதுரையில் உட்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்கவும், மனிதவளம், தொழில்வளத்தை பெருக்கவும் கவனம் செலுத்தப்படும். மதுரை மாநகருக்கான தொலைநோக்கு திட்டங்களை கொண்ட ‘விசன் 2030’ என்ற திட்ட வரைவு உருவாக்கப்பட்டு அதற்கான ஆலோசனை மற்றும் செயலாக்கக் குழு அமைக்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தபட்சம் ஒரு திறன், ஒரு தொழில் என்னும் இலக்கை கொண்டு சேர்க்கும் திட்டங்களை செயல்படுத்தப்படும். தலைச்சுமை, தள்ளுவண்டி வியாபாரிகளின் வாழ்வாதாரம் பெருக, வங்கிக்கடன்கள் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும்.

மதுரையில் மல்லிகை விவசாயிகள் மற்றும் நிபுணர்களை உறுப்பினர்களாகக் கொண்ட நிறுவனங்கள் உருவாக்கப்படும். அரசு நிறுவனங்களின் துணையோடு பெண்களே நிர்மாணிக்கும் சிறு, குறு தொழிற்சாலைகள் ஆண்டுக்கு 100 உருவாக்கப்படும். சாலை, விமானம், ரயில்போக்குவரத்து ஆகிய உட்கட்டமைப்புகள், நகரத்திற்குள்ளும் பிறநகரங்களை இணைக்கும் விதமாக ‘இன்ட்ரா மற்றும் இன்டர் சிட்டி மாடல்ஸ்’ அடிப்படையில் அதிவிரைவு ரயில் இணைப்பிற்கான முயற்சி எடுக்கப்படும். மதுரைக்கான வளர்ச்சிக்கான நிதியம் அமைக்கப்படும். சர்வதேச தரத்தில் ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகம் அமைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : candidate ,Madurai ,
× RELATED பெரியார் பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக...